அமெரிக்கா தனது வட்டி விகிதத்தை இது வரை வரலாற்றில் இல்லாத அளவிற்கு 0-0.25% என குறைந்துள்ளது. இதன் தாக்கம் எவ்வாறு இருக்கும்.
இந்த வட்டி விகித குறைப்பால் அமெரிக்க டாலரின் மதிப்பு குறையும். இந்த வட்டி விகித குறைப்பால் ஈரோ மதிப்பு உயரலாம். தங்கத்தின் மதிப்பு உயரவும் கூடும். அமெரிக்க டாலரின் மதிப்பின் அடிப்படையிலேயே சவுதி ரியால் மதிப்பு கணக்கிடப்படுவதால் சவுதி ரியால் மதிப்பும் குறையும். இந்தியாவிற்கு இன்னும் சில வாரங்களில் பணம் அனுப்புவதாக திட்டமிருந்தால் அந்த பணத்தை இப்போதே அனுப்புவது நல்லது. அல்லது கையில் இருக்கும் ரியாலில் பகுதியை ஈரோ வாக மாற்றிக்கொள்ளலாம்.
ஒரு மாதத்திற்க்கு பிறகு நிலமை மாறலாம். இந்த சூழ்நிலையை சரியாக பயன் படுத்தி கொள்ளுங்கள்.
Wednesday, December 17, 2008
0 % வட்டி
Posted by Bash at 9:40 AM 0 comments
Labels: Financial
Sunday, December 14, 2008
டென்சனை தவிர்க்க...
டென்சன், தற்போதய பரபரப்பன சூழ்நிலையில் எல்லோர்வாழ்க்கையிலும் தவிர்க்கமுடியாத ஒரு விசயமாகிவிட்டது. லேட் நைட் வரை டீவி பார்ப்பது, காலையில் லேட்டாக எழுந்திறிப்பது, பின் அவசர அவசரமாக குளிந்து, சாப்பிட்டு, அலுவலகம் கிழம்ப, பஸ் கிடைக்குமா, நெரிச்சல், லேட்டாச்சே, மேனேஜர் பார்த்து விட்டாரா என அலுவலக வேலையை ஆரம்பிக்கும் முன்பே டென்சன். இப்படி வேலையை துவங்க வேலையிலும் குளருபடி டென்சனோ டென்சன்.
ஏற்கனவே டென்சனைப்பற்றி ஒரு பதிவு வந்திருக்கிறது. சில நண்பர்கள் டென்சனை குறைக்க சில பயிற்சி முறைகளை கேட்டிருந்தார்கள் (பின்னூட்டம் போட்டிருந்திருக்கலாம்) அவர்களுக்காக சில மூச்சி பயிற்சி.
1. உங்கள் கண்களை மூடிக்கொண்டு, உங்கள் விரல் நுனியால் நெற்றியில் இரண்டு புருவங்களுக்கு நடுவே தொடுங்கள். இந்நிலையிலேயே 3 முதல் 5 நிமிடங்களுக்கு மூச்சை மெதுவாகவும் ஆழமாகவும் இழுத்துவிடுங்கள்.
2. உடலை தளர்த்திக்கொண்டு நின்றோ அல்லது உட்கார்ந்த நிலையில், மெல்ல மூச்சை 5 வரை எண்ணிக்கொண்டு உள் இழுங்கள். பிறகு மனதிற்குள் 8 வரை எண்ணிக் கொண்டே மூச்சை வாய் வழியாக மெதுவாக வெளிவிடுங்கள். இவ்வாறே சில முறை திரும்ப செய்யுங்கள்.
இதில் உங்களுக்கு பலன் தெரிந்ததா? பயன் படுத்திபார்த்தவர்கள் தங்கள் அனுபவத்தை பின்னூட்டமாக இடவும்.
Posted by Bash at 6:30 PM 0 comments
Labels: ஆரோக்கியம்
Sunday, December 7, 2008
காஃபா அறிய படங்கள்
காஃபா ஆலயத்தை மூடி இருக்கும் கருப்பு துணியினை "கிஸ்வா" என்றழைக்கப்படுகிறது. இது ஒவ்வொரு வருடமும் புதிதாக செய்யப்பட்டு, மாற்றப்படுகிறது. "கிஸ்வா" என்றழைக்கப்படுகிற கருப்பு துணியினை மக்காவில் இதற்கென்று தனியாக அமைக்கப்பட்ட ஒரு தொழில் கூடத்தில் தயரிக்கப்படுகிறது. இந்த துணியின் மொத்த பறப்பளவு 658 சதுரடி. இதில் தங்கம், மற்றும் வெள்ளியால் குர்ரான் வசனங்களை எழுதப்பட்டுள்ளது. சுமார் 120 கிலோ தங்கமும், 50 கிலோ வெள்ளியும் இதற்காக பயன்படுத்தபடுகிறது. சுமாரக 17 மில்லியன் சவுதி ரியால் செலவில் தயாரிக்கப்படுகிறது.
Posted by Bash at 11:26 AM 3 comments
Labels: இஸ்லாம்
Tuesday, December 2, 2008
Monday, December 1, 2008
Back Pain
முதுகு வலிக்கு காரணமாகும் இருக்கைகள்
அலுவலகத்தில் பணி புரிவோர் தங்களின் வேலை பளுவுக்கு மத்தியில் தலைவலி, முதுகுவலி போன்ற மற்ற தொந்தரவுகளையும் சந்திக்க வேண்டியுள்ளது.தலைவலிக்கு அடுத்தபடியாக பெரும்பாலானோரை அதிகம் பாதிப்பது முதுகுவலி தான்.இதற்கு முக்கிய காரணமாக இருப்பது நாம் அமரும் இருக்கை தான்.
தொடர்ந்து பல மணி நேரம் உட்கார்ந்து வேலை செய்பவர்கள் மேலதிகாரிகளிடம் கூறி, அவரவர் உடல் வாகுக்கேற்றவாறு இருக்கைகளை தேர்ந்தெடுத்து அதில் தான் அமர வேண்டும்.
இருக்கையை தேர்வு செய்யும்போது கவனிக்க வேண்டியவை, பொதுவாக அவை வளைந்து கொடுக்கும் தன்மை உடையதாக இருக்க வேண்டும்.கைகளை வைத்துக் கொள்ள வசதி செய்யப்பட்டு இருக்க வேண்டும். நமக்கு தேவையான இருக்கையை தேர்வு செய்ததும், அதில் உட்கார்ந்து பார்த்து, அதற்கேற்றவாறு அதை மாற்றிக் கொள்ள வேண்டும். கூடுமானவரை நாம் பயன்படுத்தும் இருக்கையை மற்றவர்கள் உபயோகத்திற்கு தருவதை தவிர்க்க வேண்டும்.அவர்கள் அதில் அமருவதால், அதன் அமைப்புகள் மாறுபட்டு, அதனால் நமக்கு பாதிப்பு ஏற்படலாம். இருக்கையில் அமரும்போது முதுகு நன்றாக சாய்ந்திருக்கும்படியும்,முழங்கால் வரை இருக்கையில் பதிந்திருக்கும்படியும் பார்த்துக் கொள்வது நல்லது. அதேபோல் கணினிக்கு மிக அருகிலோ, அல்லது மிகவும் தள்ளியோ இருக்கையை அமைத்துக் கொள்வதால் கை, முதுவலி ஏற்பட வாய்ப்புண்டு.பணி புரியும் போது கை - கால்கள், கழுத்து, முதுகை ரிலாக்ஸாக வைத்துக் கொள்ள வேண்டும். தொடர்ந்து இருக்கையை விட்டு எழுந்திரிக்காமல் பணி புரிவதைவிட, அரைமணிக்கு ஒருமுறை எழுந்து அங்கும் இங்குமாக நடக்க வேண்டும்.
Posted by Bash at 9:14 PM 1 comments
Labels: Health
Thursday, November 27, 2008
Optical illusion
Our senses cannot always be trusted. Our mind is the final arbiter of truth.
How can the man go up all the time and come back to the same place over and over?
Wavy Squares? No! The background of concentric circles makes the squares appear distorted.
Analyze the fact and make the decision.
Posted by Bash at 9:13 PM 1 comments
Labels: Fun
Wednesday, November 26, 2008
Be confident
எதிர்காலம் என்பது
வேறொன்றும் இல்லை, உன்
நிகழ்கால முயற்சியின்
முடிவைத் தவிர
சிறப்பாக திட்டமிட்டு அதை
செவ்வனே செயல்படுத்த
வருகிற முடிவு, இறைவன்
அளித்த வரமே
தோல்வி என்ற வார்த்தையை
தூக்கி எறி, வெற்றியின்
படிக்கட்டுக்கள் என்றெண்ணி
வேகமாய் முன்னேறு
நம்பிக்கை என்றொரு
நல்மருந்து உன்னுள்
இருக்கையில் துன்பத்தை
கண்டு நீயேன் ஓட வேண்டும்
Posted by Bash at 6:41 PM 0 comments
Labels: கவிதைகள்
Monday, November 24, 2008
Control your Tension
உலகமானது இன்று விஞ்ஞான ரீதியில் எவ்வளவோ முன்னேறியிருப்பது உண்மை தான். ஆனால், மக்கள் நிம்மதியில்லாமல், மாநிலங்களிடையே, பல்வேறு நாடுகளிடையே போட்டி, கலவரங்கள், ஒருவருக்கு ஒருவர் ஆட்சி செய்ய முற்படுவது போன்ற காரணங்களால் பதட்டமும், டென்ஷனுமாக வாழ்க்கை ஓடிக்கொண்டிருக்கிறது.
சாதாரணமாக ஜலதோஷத்தை விட இந்நோய் அதிகம் பேரிடம் காணப்படும். தீராத பெருநோயாக இருக்கிறது. தேவையில்லாத ஒரு பயம், நமக்கு ஏதாவது ஆகிவிடுமோ என்ற பீதி. ஆங்காங்கு நடைபெறும் சில விபத்துக்கள், ரயில் விபத்துகளில் பலபேர் மரணம் என்று ஊடகங்களில் வெளிவரும் செய்திகளைக் கண்டு நாமும் விபத்தில் சிக்கி இறந்துவிடுவோமோ என்ற தேவையற்ற அச்சம், ஓடி, ஆடி, கை நிறையச் சம்பாதித்தாலும், நாளை பணியிலிருந்து ஓய்வு பெற்ற பின்பும் இதே மாதிரி சௌகரியமாக வாழ முடியுமா? மனைவி, மக்கள் , நம்மை, மதிப்பார்களா? வெளியில் கௌரவமாக இருக்க முடியுமா?… உடம்புக்கு திடீரென பாதிப்பு வந்து விட்டால் என்ன செய்வது?
பிள்ளைகளை நன்றாகப் படிக்க வைக்க வேண்டுமே! அவர்கள் வேலையில் சேர்ந்து நம்மைப் பாதுகாப்பார்களா! பெண்ணிற்கு நல்ல இடத்தில் திருமணம் செய்து வைக்க வேண்டுமே! நல்ல மாப்பிள்ளையாக அமைய வேண்டுமே? கொடுத்த இடத்தில் பெண் நிம்மதியாக இருப்பாளா? என்று பெற்றோருக்குக் கவலை.
எங்கே நிம்மதி அங்கே உனக்கோர் இடம் வேண்டும் என்று தான் அனைவரும் தேடிக் கொண்டிருக்கிறார்கள். உலகில் பல நாடுகளில் ஆயிரக்கணக்கான பேர் இப்படி டென்ஷன், ஹைபர்டென்சன் போன்ற நோயால் அதிகப்பட்டுக் கொண்டிருப்பதைப் பார்க்கின்றோம்.
சிட்டி பஸ்ஸூக்காக காத்துக் கொண்டிருப்போம். நாம் போக வேண்டிய பஸ்ஸைத் தவிர மற்றதெல்லாம் வரும் சே! எனக்கு அதிர்ஷ்டமே இல்லை. பஸ்ஸே வரமாட்டேன் என்கிறது. மினி பஸ்ஸில் போகலாம் என்றால், டிக்கெட் வசூல் தான், அவர்களது குறிக்கோளாக இருப்பதால், கண்ட, கண்ட இடங்களில் ஆட்களை ஏற்றிச் செல்வதற்காக வெகு நேரம் காத்திருப்பதால், மினி பஸ் நமக்கு வசதியாக இல்லை. சரி ஒரு பஸ்ஸில் ஏறி, அடுத்த பஸ்ஸில் மாறிச் செல்வோம் என்றால் அதற்கு மனம் இடம் தரவில்லை. போதாக்குறைக்கு மனைவியுடன் பஸ் ஸ்டாப்பில் நின்றிருப்பது வேறு கஷ்டம். ஆட்டோவில் போகலாம் என்றால், உடனே மனைவி ‘பணம் என்ன கொட்டியா கிடக்கு. கொஞ்சங்கூட பொறுமையே கிடையாது. தம்முடைய பஸ் வரட்டும்” என்பார். நான்கு பேர் மத்தியில் மனைவியுடன் வாதாடிக் கொண்டிருக்க மனம் இல்லாமல் ஒரே சங்கடம். இது ஒரு டென்ஷன்.
இப்படிப் பல காரணங்களால் தேவையில்லாமல் நாம் மன உளைச்சலுக்கு ஆளாகிறோம்.
பிராங்களின பெலிமர் என்ற மேலைநாட்டு தத்துவ அறிஞர் “Main Currents of Western Thought” என்ற நூலில் நமது இன்றைய காலகட்டத்தை “கவலையும் பரபரப்புமான யுகம்” என்று குறிப்பிட்டுள்ளார். உண்மைதான்.
யாரும் அமைதியாக இல்லை. மகிழ்ச்சியாக இல்லை. ஏதோ ஒரு நிர்பந்தத்திற்கு ஆளாகி தவிக்கவே செய்கிறார்கள். மனிதர்களின் வாங்கும் சக்தியோ, செல்வச் செழிப்போ வளர்ந்திருக்கும் அளவிற்கு மனதில் நிம்மதியில்லை; மகிழ்ச்சியில்லை. வசதி, வாய்ப்புகள் பெருகியும் மனநிறைவைத் தரவல்லை என்பதுதான் உண்மை.
இங்கு எங்கு பார்த்தாலும் பதவி ஆசை. போட்டோ போட்டி, பணம் ஒன்றே குறி என்று அந்தப் பணம் எப்படிக் கிடைத்தாலும் அதை அடைந்தே தீர்வது என்ற வெறி என்று நமது டென்ஷனை அதிகரிக்கச் செய்தவற்கான காரணிகள ஏராளம்.
வாழ்வதன் சுவை திருப்தி குறைந்து போய்விட்டது. ஸ்விடன் நாடு தான் உலகிலேயே தனிநபர் வருமானம் அதிகமுள்ள நாடாகும். சகலவசதிகளும் உள்ள இந்த நாட்டில் தான் தற்கொலை செய்து கொள்பவர்களின் எண்ணிக்கை மிக அதிகம் என்று ஓர் ஆய்வறிக்கை கூறுகிறது.
விட்டுக் கொடுத்து அனுசரித்துப் போகும் தன்மை, விழிப்புணர்வு, பிறருக்கு உதவி செய்யும் மனப்பான்மை போன்ற தார்மீகப் பண்புகள் எல்லாம் குறைந்து விட்டன.
அரசியல்வாதிகள் - தங்கள் சுயநலத்திற்காக மக்களைச் சண்டைக் கோழிகளாக்கி விட்டு வேடிக்கை பார்க்கும் கூட்டம் நாட்டில் அதிகமாகிவிட்டது. பந்த், மறியல், ஸ்டிரைக் என்று ஏதாவது பிரச்னைகளுக்காக மக்களைத் தூண்டிவிட்டு குளிர்காய்ந்து கொண்டிருக்கிறார்கள்.
டென்ஷன் தான் பல்வேறு நோய்களுக்கும் மூலகாரணம் என்பது ஏனோ யாரும் புரிந்து கொள்ளவில்லை. இதனால் தூக்கத்தைப் பறிகொடுத்துவிட்டு பறிதவிக்க வேண்டியிருக்கிறது. இது மேலும் நமது உடல் நலனை பாதிக்கிறது.
சரி! இந்த டென்ஷனலிருந்து விடுபடுவது எப்படி? இதோ சில யோசனைகள்.
முதலில் வாழ்க்கையின் நோக்கத்தைப் புரிந்து கொள்ளுங்கள். வாழ்க்கை வாழ்வதற்கே அன்றி கவலைபடுபவதற்கல்ல என்று நினையுங்கள். பிரச்சனைகள் இல்லாத வாழ்க்கை இல்லை. அதனால் பிரச்னையே வாழ்க்கையாவது தான் சிலரது சோகம்.
நீங்களே உங்களுக்கு உற்ற நண்பர்கள். நீங்களே உங்களுக்குப் பகை என்று கீதை சொல்வதை நினைவில் கொள்ளுங்கள். நமது மேன்மைக்கும், தாழ்வுக்கும் நாமே தான் காரணமேயன்றி, யாரும் பொறுப்பல்ல என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
எல்லோரிடமும் அன்பாகப் பழகுங்கள். விட்டுக் கொடுத்து அனுசரித்துச் செல்லுங்கள். ஒரு போதும் பிறரைக் குறைசொல்லாதீர்கள். முடிந்தால் பிறருக்கு உதவி செய்யுங்கள். இல்லாவிட்டால் சும்மா இருந்துவிடுங்கள்.
நீங்கள் உலகத்தைத் திருத்தப் போகும் தலைவனாக ஒருபோதும் நினைத்துக் கொள்ளாதீர்கள். பிறருக்கு வலியச் சென்று ஆலோசனை கூறுகிறேன் என்று வாங்கிக் கட்டிக் கொள்ளாதீர்கள்.
கேட்டால் மட்டும் சொல்லுங்கள். அதுவும் இது என்னுடைய கருத்து உங்களுக்கு உதவுமானால் ஏற்றுக்கொள்ளுங்கள் என்று பேசுங்கள்.
Mind your own Business, உங்கள் வேலைகளை நீங்கள் பார்த்துக் கொண்டு செல்லுங்கள் அனாவிசயமாகப் பிறர் விஷயத்தில் தலையிடாதீர்கள். Don’t Poke Your Nose Unnessarily.
எதிர்மறையான எண்ணங்களை விட்டொழியுங்கள். நல்லதையே நினையுங்கள். எல்லாம் நல்லபடியே நடக்கும் என்று நம்புங்கள். நல்லபடியாக வாழக் கற்றுக் கொள்ளுங்கள்.
இயற்கை நியதி என்னவென்றால் நல்லதை நினைத்தால் நல்லபடியே எல்லாம் நடக்கும். ஆகவே ஒரு போதும் கவலைப்பட வேண்டாம்.
மனிதப் பிறவி இறைவன் கொடுத்த பிரசாதம். லாபமாகக் கருதுங்கள். வளமோடு வாழ முற்படுங்கள். சுற்றுச்சூழலும், உங்களது குடும்பத்தாரும், நண்பர்களும் மற்றவர்களும் ஏடாகூடமாக நடந்து கொண்டாலும் அதனால் நீங்கள் பாதிக்கப்படாமல் பார்த்துக் கொள்ளுங்கள். Take it Easy.
நமக்கு ஏதாவது கஷ்டம் வந்து விடுமோ என்று ஒரு போதும் நினைக்காதீர்கள். மற்றவர்களுக்கு கஷ்டம் வருகிறது என்றால் நமக்கு வரக்கூடாதா?
கஷ்டமும், நஷ்டமும், இன்ப, துன்பமும் இல்லாத வாழ்க்கை இல்லையே. சுழற்சி வட்டம் போல மாறி, மாறி வந்து கொண்டு தான் இருக்கும் என்பதை மறந்துவிட வேண்டாம்.
Better Never Trouble Until Trouble Troubles You என்பதை நினைவில் கொள்ளுங்கள். குழந்தையைப் போல மனம் இருந்தால் உங்களுக்கு ஒரு போதும் துன்பம் இல்லை.
உங்கள் வழி நேர்மையாக இருந்தால் அந்த வழியிலேயே தொடர்ந்து செல்லுங்கள். பிறர் யோசனை கூறினால், மறுக்காமல், எதிர்க்காமல் ஏற்றுக்கொள்ளுங்கள். உங்கள் முடிவே உங்களுக்கு நன்மை பயக்கும். Take your own Decision and stick on to it. அமைதியாக எந்த பிரச்சனையையும் எதிர்கொள்ளக் கற்றுக் கொள்ளுங்கள். யாருக்கும் வராத பிரச்சனை நமக்கு வந்துவிடவில்லை. அதனை தைரியமாக சமாளிக்கலாம் என்று நம்புங்கள். மன உறுதியுடன் அந்தப் பிரசனையை எதிர்கொள்ளுங்கள். காலம் மனப் புண்ணை ஆற்றும் அருமருந்தாகும். அதனால் ஆறப்போடுங்கள். பின்பு அந்தப் பிரச்சனை பிரச்சனையாகவே தோன்றாது. இதற்குப் போய் வீணாக அலட்டிக் கொண்டோமே என்று எண்ணத் தோன்றும்.
இயற்கை உணவுகள் பரபரப்பையும், டென்ஷனையும் குறைக்கும் பழரசங்கள் குறிப்பாக மாதுளை, சாத்துக்குடி, ஆரஞ்சு ஜூஸ், இளநீர் நன்மை பயக்கும்.
ஆசனங்கள், பிராணயாமம், தியானம் செய்யப் பழகுங்கள். இவை பலன் தரும். தினசரி காலை, மாலை இரு நேரமும் குறைந்தது பத்து நிமிடங்களாவது தியானத்தில் அமருங்கள். குறிப்பிட்ட நேரத்தில், குறிப்பிட்ட இடத்தில் தியானம் செய்ய பழகும் போது மனம் எளிதில் வசப்படும்.
ஆரம்பத்தில் எண்ண ஓட்டத்தில் மனம் அடங்காமல் உளைச்சல் அதிகமாகத் தான் இருக்கும். மனதில் தோன்றும் எண்ணங்கள் யாவும் வெறும் குப்பை அவற்றைப் புறம் தள்ளுங்கள். இந்த எண்ணங்களுக்கு நான் ஆட்பட மாட்டேன் என்று உறுதியாக நம்புங்கள்.
கோபம், பொறாமை, எரிச்சல், வெறுப்ப, கவலை போன்ற உணர்ச்சிகளுக்கு ஆளாகாமல் புறம் தள்ளுங்கள்.
எப்போதும் நான் மகிழ்ச்சியாக இருப்பேன். அமைதியாக இருப்பேன். என்பது போன்று எண்ணத் தொடங்குங்கள். இதை நிறைவான எண்ணங்கள் ஆழ்மனதில் பதியப் பதிய டென்ஷனும், பரபரப்பும் குறைந்து நிம்மதி அடைவீர்கள்.
இனிய இசை கேட்டல், நம்பிக்கை தரும் நூல்களை வாசித்தல், சற்று நேரம் வெளியே உலாவி வருதல், சமவயதுடைய நண்பர்களுடன் அளவளாவுதல், குடும்பத்தாருடன் மனம்விட்டுப் பேசுதல், குழந்தைகளோடு குழந்தைகளாக விளையாடல் இவையாவும் டென்ஷனைக் குறைக்க உதவும்.
யோக நித்திரை என்ற மனதையும், உடலையும் இளைப்பாறச் செய்யும் (Relaxation Therapy) பயிற்சியை மேற்கொள்வது நலன்தரும்.
இவையாவும் பலன் தராமல் போனால் மனநல மருத்துவரை நாடி தக்க சிகிச்சை எடுத்துக் கொள்ளுங்கள்
Posted by Bash at 10:08 PM 0 comments
Labels: ஆரோக்கியம்
Halts Egypt doctor visas to Saudi
சவுதிக்கு செல்ல எகிப்திய மருத்துவர்களுக்கு தடை
சவுதி அரேபியாவில் வேலை செய்யும் பல வெளிநாட்டுத் தொழிலாளர்கள் பிரச்சினைகளை சந்திக்கின்றனர்
சவுதி அரேபியாவுக்கு எகிப்திய மருத்துவர்கள் சென்று பணியாற்றுவதற்கு எகிப்திய அரசாங்கம் தடை விதித்துள்ளது.
எகிப்திய மருத்துவர் ஒருவரால் வழங்கப்பட்ட மருந்தின் காரணமாக சவுதியின் ஒரு இளவரசி போதை மருந்துக்கு அடிமையாகும் நிலைமை ஏற்பட்டதாக குற்றஞ்சாட்டப்பட்டு, அந்த மருத்துவருக்கு சவுதியில், 1500 சவுக்கடிகளும், 15 வருட சிறை தண்டனையும் விதிக்கப்பட்டதைக் கண்டித்து கெய்ரோவில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் நடந்த நிலையில், இந்த உத்தரவு வந்துள்ளது.
தற்போது வேலைக்கான அனுமதியில் விதிக்கப்பட்டுள்ள இந்த புதிய தடை, ஏற்கனவே சவுதியில் பணியாற்றும் எகிப்திய மருத்துவர்களை பாதிக்காது என்றும், எகிப்திய அதிகாரிகள் கூறியுள்ளனர்.
குதிரையேற்ற விபத்து ஒன்றில் கடுமையாக காயமடைந்த பெண்ணுக்கு மோர்பின் என்னும் மருந்தை இந்த மருத்துவரான ரவுவ் அமீன் பரிந்துரைத்துள்ளார்.
தனது சிறைத்தண்டனைக் காலத்தில், வாராந்தம், பொதுமக்கள் முன்பாக இவருக்கு இந்த கசையடிகள் வழங்கப்படும்.
Posted by Bash at 9:32 PM 0 comments
Labels: Saudi Life
Tuesday, November 18, 2008
Net Jokes
"தலைவரே! நீங்க இப்ப சொன்னது நூத்துக்கு நூறு உண்மை...!''
''சரியான ஜால்ராய்யா நீ! இப்ப நான் ஒண்ணுமே சொல்லலை...
கொட்டாவி தான் விட்டேன்...!''
--------------
மன்னா ! நமது வீரர்களின் எண்ணிக்கையில் ஒன்று குறைகிறது...!
அதுக்கு ஏன் இப்படி பதற்றப்படுகிறீர் அமைச்சரே !
ராணிகளின் எண்ணிக்கையிலும் ஒன்று குறைகிறது மன்னா !
------------
என் கணவர் பெரிய கலா ரசிகர்னு எனக்கு
நேத்துதான் தெரிஞ்சது !
'தெரிஞ்சதும் என்ன பண்ணினே ?'
'கலாவை வேலையைவிட்டு நிறுத்திட்டேன் !'
------------
"நான் இந்த ஸ்கூட்டரை 2 வருடமாக வைத்திருக்கிறேன், இது வரை ரிப்பேர் என்று ஒரு பைசா கூட செலவு செய்ததில்லை"
"ஆமாம், உங்க ஸ்கூட்டர் மெக்கானிக்கூட இதே தான் சொன்னார்"
------------
இப்படி பைக்ல போயிக்கிட்டே செல்போன் பேசுறது தப்பு மேன் !
அப்புறம் ஏன் சார் ’நிறுத்தாம பேசுங்கள்’-ன்னு விளம்பரம் செய்யுறாங்க !
------------
நம்ம தலைவரோட செல் நம்பர் இருபத்தாறு...
என்னது இரண்டு நம்பர்தானா ....?
நான் சொன்னது...... ஜெயில்ல அவரோட செல் நம்பர் !
------------
'நம்ம தலைவருக்கு விளம்பரமே பிடிக்காது !'
'அப்படியா ?'
'ஆமா. உடனே சேனலை மாத்திடுவார் !'
------------
'இட்லி சாஃப்டா இருக்குமா?'
'சாப்டா இட்லி இருக்காது, வயித்துக்குள்ள போயிடும்.'
-----------
'உங்க வீட்டுக்காரர் டி.வி. சீரியலைப் பார்த்து, ஏன்
அழுவுறாரு ?'
'நீங்க வேற.... அவர் பார்க்கிறது எங்க கல்யாண கேஸட் !'
-----------
"பேங்கில் பணம் எடுத்த "ஷாக்" அடிக்குமான்னு கேக்குறார்"
"ஏன்?"
"ஏன்னா அவர் வச்சிருக்கிறது கரன்ட் அக்கவுண்டாம்"
Posted by Bash at 8:48 PM 0 comments
Labels: Fun
Saturday, November 15, 2008
Take care your Brain
1 Egg, & 2 Mobiles
65 minutes of connection between mobiles.
We assembled something as per image:
Initiated the call between the two mobiles and allowed 65 minutes approximately...
During the first 15 minutes nothing happened;
25 minutes later the egg started getting hot;
45 minutes later the egg is hot;
65 minutes later the egg is cooked.
Conclusion: The immediate radiation of the mobiles has the potential to modify the proteins of the egg. Imagine what it can do with the proteins of your brains when you do long calls.
Posted by Bash at 8:06 PM 0 comments
Labels: Health, ஆரோக்கியம்
Friday, November 14, 2008
Easy & Difficult
Easy is to judge the mistakes of others.Difficult is to recognize our own mistakes
Easy is to talk without thinking. Difficult is to refrain the tongue.
Easy is to hurt someone who loves us. Difficult is to heal the wound.
Easy is to forgive others. Difficult is to ask for forgiveness.
Easy is to set rules. Difficult is to follow them.
Easy is to dream every night. Difficult is to fight for a dream.
Easy is to show victory. Difficult is to assume defeat with dignity.
Easy is to admire a full moon. Difficult to see the other side.
Easy is to stumble with a stone. Difficult is to get up.
Easy is to enjoy life every day. Difficult to give its real value.
Easy is to promise something to someone. Difficult is to fulfill that promise.
Easy is to say we love. Difficult is to show it every day.
Easy is to criticize others. Difficult is to improve oneself.
Easy is to make mistakes. Difficult is to learn from them.
Easy is to weep for a lost love. Difficult is to take care of it so not to lose it.
Easy is to think about improving. Difficult is to stop thinking it and put it into action.
Easy is to think bad of others. Difficult is to give them the benefit of the doubt.
Easy is to receive. Difficult is to give.
Easy to read this. Difficult to follow.
Easy is keep the friendship with words. Difficult is to keep it with meanings.
Posted by Bash at 2:23 PM 0 comments
Labels: Attitude
Thursday, November 13, 2008
Develop your Attitude
1. NEVER EXPECT THINGS TO HAPPEN.....STRUGGLE AND MAKE THEM HAPPEN.....NEVER EXPECT YOU TO BE GIVEN A GOOD VALUE.....CREATE YOUR OWN GOOD VALUE....DONT UNDER ESTIMATE YOUR SELF...YOUR WORTH MORE THAN ANYTHING IN THIS WORLD.
2.LOOK WITH POSITIVE INTENTION, SPEAK WITH INNER CONVICTION, LISTEN WITH INTENSE ATTENTION, AND YOU WILL MOVE IN THE RIGHT DIRECTION.
3.THE ROAD TO SUCCESS IS NOT STRAIGHT. THERE IS A CURVE CALLED FAILURE....A LOOP CALLED CONFUTION...SPEED BUMPS CALLED FRIENDS....RED LIGHT CALLED ENEMIES...CAUTION LIGHT LIGHT CALLED FAMILY...BUT....IF U HAVE A SPARE CALLED DETERMINATION...AN ENGINE CALLED PERSEVERANCE...INSURANCE CALLED FAITH ,A DRIVER CALLED GOD ...YOU WILL MAKE IT TO A PLACE CALLED SUCCESS.
4.DON'T RUN AHEAD OF GOD,LET HIM DIRECT YOUR STEPS. HE HAS PLANS AND HE HAS TIME...GOD'S CLOCK IS NEVER EARLY NOR LATE..IT ALWAYS STRIKES
THANKS & REGARDS
BASHEER
Posted by Bash at 10:31 PM 0 comments
Labels: Attitude
Develop your Attitude
I went thru a book and would like to give some points which I liked.,
1. Its not the matter how much intelligence you have but how u use what you have.
2. Deposit only positive thoughts in your memory bank.
3. Action cures Fear.
4. Big thinker always visulaises what can be done in future.
5. Use positive language to encourage others.
6. Humans greatest weakness is self depreciation.
7. you are what you think.
8. Your appearence talk to others.
9. Big people monoplize listening and small people monopolize talking.
10. Don't let ideas to escape, write them down.
11. Ideas are fruits of your thinking.
12. Beleive it can be done.
13. Look at yourself through superiors eyes.
14. Enthusiasm can make things 1100% better.
15. People do more for you when you make them fell important.
16. Practise appreciation when ever you can.
17. Give Spirutual strength to people and they will give genius affectionto you.
18. Take initiative in building friendships.
19. Recoganise the fact that no person is perfect.
20. Set goals to things done.
21. Stop Blaming luck.
22. Expect future obstacles and difficulties.
23. Remember there is a good side in every situation, find it.
Watch your "Thoughts," they become words.
Watch your "Words," they become actions.
Watch your "Actions," they become habits.
Watch your "Habits," they become character.
Watch your "Character," for it becomes your "Destiny."
Thanks & Regards
Basheer
Posted by Bash at 9:51 PM 1 comments
Labels: Attitude